Tuesday, March 8, 2011

Nellu - Again

சமீபத்தில் திரைக்கு வந்து ஒரு வாரம் கூட ஓடாத படம் நெல்லு. படம் ஓடாவிட்டாலும் இப்படத்தின் கரு மிக முக்கியமானது என்பதால் சமூக ஆர்வலர்கள் நெல்லு பார்க்க ஆர்வத்தோடு முன் வந்தார்கள்.

கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களை குடும்பத்தோடு தீயிட்டு கொளுத்திய பண்ணைமார்கனின் அட்டகாசம்தான் கதையின் மெயின் லைன்.

undefinedஇப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் ஜெய் என்பவர் நெல்லுவில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவர் நடித்தார் என்பதற்காக ஏராளமான காட்சிகளை வைத்திருந்தாராம் டைரக்டர்.

ஆனால் எடிட்டர் எல்லாவற்றையும் வெட்டி எறிந்துவிட்டார். தான் நடித்த காட்சிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த கார்த்திக் ஜெய், வெண்மணி என்ற பெயரில் புதிய படம் ஒன்றை துவங்கிவிட்டார்.

முந்தைய படத்தில் வெட்டப்பட்ட காட்சிகளை இதில் ஒட்ட வைத்து சமாளித்ததுடன், இன்னும் சில காட்சிகளை சேர்த்து புதுப்படம் ஆக்கிவிட்டார்களாம். அப்படி பார்த்தால் பாலா படங்களில் வெட்டிப் போடப்பட்ட கிளிப்பிங்ஸ்களை வாங்கினால் நாலைந்து படங்கள் தேறுமே.



Source:http://www.viduppu.com

No comments: